டிரம்பை துப்பாக்கியால் சுட்டவர் யார் தெரியுமா?  

Estimated read time 0 min read

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இன்று நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கியால் சுடப்பட்டது.

இந்த சம்பவத்தால் அவரது வலது காதை துப்பாக்கி குண்டு துளைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவரை சுட்டது யார் என்பது தெரியவந்துள்ளது.
முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய முயன்ற நபர் 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பெத்தேல் பூங்காவில் வசித்து வந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ், டிரம்ப் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த மேடையில் இருந்து 130 கெஜம் தொலைவில் உள்ள ஒரு உற்பத்தி ஆலையின் கூரையில் நின்று கொண்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author