வர்த்தக ஒப்பந்தம், எல்லையில் அமைதியை பேணுதல் உள்ளிட்டவை குறித்து சீன அமைச்சருடன் மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேச்சுவார்த்தை நடத்தினார்.
தலைநகர் டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் ஷெர்பா கூட்டத்தில் பங்கேற்பதற்காக சீன அமைச்சர் மாசுவோக் இந்தியா வந்துள்ளார்.
அவரை வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவு, வர்த்தகம், இந்திய – சீன எல்லையில் தொடர்ந்து அமைதியை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஐநாவில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக அங்கீகரிக்க சீனா ஆதரவு அளிக்கவேண்டுமென அந்நாட்டு அமைச்சர் மாசுவோக்கிடம் விக்ரம் சிங் கோரிக்கை விடுத்தார்.
