எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவ படைகளை திரும்பப்பெற இந்தியா-சீனா ஒப்புக்கொண்டன  

சர்ச்சைக்குரிய இந்திய-சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை அவசரமாக திரும்பப் பெறுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நேற்று லாவோஸில் நடந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு கூட்டத்தின் போது சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்தார்.

அப்போது இந்திய-சீன எல்லையில் நிலுவையில் உள்ள சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

மேற்கில் லடாக் முதல் இந்தியாவின் கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் வரையிலான சீன-இந்திய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் உண்மையான கட்டுப்பாட்டு கோடு என்று அழைக்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author