பகிர்ந்த வளர்ச்சிக்கான உலகளாவிய நடவடிக்கை மன்றத்தின் முதலாவது உயர்நிலை கூட்டம்

சீன சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஷுவெய் ஜூலை 3ஆம் நாள் கூறுகையில், பகிர்ந்த வளர்ச்சிக்கான உலகளாவிய நடவடிக்கை மன்றத்தின் முதலாவது உயர்நிலை கூட்டம் ஜூலை 9 மற்றும் 10ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. 130க்கும் மேலான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த விருந்தினர்கள் நேரடியாகவும் இணைய வழியாகவும் இக்கூட்டத்தில் பங்கெடுக்க உள்ளனர் என்றார்.
2021ஆம் ஆண்டு செப்டம்பரில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஐ.நா பொது பேரவையில் உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவை முன்வைத்தார். 2022ஆம் ஆண்டு ஜுன் திங்கள், உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவின் 32 பயன்தரும் நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார். பகிர்ந்த வளர்ச்சிக்கான உலகளாவிய நடவடிக்கை மன்றக்கூட்டத்தை நடத்துவது அவற்றில் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
“சீனாவின் முன்மொழிவு, உலகளாவிய நடவடிக்கை”என்பது நடப்பு மன்றக்கூட்டத்தின் கருப்பொருளாகும். மேலும், இம்மன்றக்கூட்டத்தின் கீழுள்ள 4 கருத்தரங்குகள் அப்போது நடைபெறவுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author