மத்திய வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு  

மத்திய வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியது பின்வருமாறு:-
வடமேற்கு மற்றும் மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மையம் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 310கிமீ தொலைவிலும், ஒடிசாவில் கோபால்பூருக்கு கிழக்கே, தென்கிழக்கே சுமார் 290கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author