அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம்  

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவின் தலைநகர் போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) அறிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரதமர் நரேந்திரமோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, தேசத்தை காலனித்துவ முத்திரைகளில் இருந்து விடுவிக்க, இன்று போர்ட் பிளேயரை ஸ்ரீ விஜய புரம் என்று மறுபெயரிட முடிவு செய்துள்ளோம்.
முந்தைய பெயர் காலனித்துவ மரபைக் கொண்டிருந்தாலும், ஸ்ரீ விஜயபுரம் அடைந்த வெற்றியைக் குறிக்கிறது.
நமது சுதந்திரப் போராட்டத்திலும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தனிப்பெரும் பங்கும் அதில் உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author