நீட் முறைகேடுகள் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை காங்கிரஸ் எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சாடியதால் நாடாளுமன்றத்தில் இன்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
“நீட் தேர்வில் மட்டுமல்ல, அனைத்து முக்கியத் தேர்வுகளிலும் நமது தேர்வு முறையில் மிகக் கடுமையான சிக்கல் உள்ளது என்பது முழு நாட்டிற்கும் தெளிவாகத் தெரிகிறது” என்று ராகுல் காந்தி கூறினார்.
“அமைச்சர்(தர்மேந்திர பிரதான்) தன்னைத் தவிர மற்ற அனைவரையும் குற்றம் சாட்டியுள்ளார். இங்கு என்ன நடக்கிறது என்பதன் அடிப்படைகள் அவருக்குப் புரியவே இல்லை என்று நான் நினைக்கவில்லை.” என்று ராகுல் காந்தி கல்வி அமைச்சரை கடுமையாக சாடினார்.
இந்திய தேர்வு முறையின் நேர்மை குறித்து ராகுல் காந்தி கவலை தெரிவித்தார்.