திருவள்ளுவர் பிறந்ததின சர்ச்சை: சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு  

Estimated read time 1 min read

சென்னை உயர்நீதிமன்றம், “திருவள்ளுவர் பிறந்த தினம் இதுதான் என உத்தரவிட முடியாது” எனத் தெரிவித்துள்ளது.
தை 2 ஆம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுவதாக எதிர்த்து, திருவள்ளுவர் திருநாள் கழகத்தின் தலைவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
1935-ம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கில், மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்கள், வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்ததாக குறிப்பிட்டனர்.
மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில், அந்த நாளில் தான் விழா கொண்டாடப்படுகிறது என்றும் மனுதாரர் குறிப்பிட்டார்.
ஆனால், அரசு தரப்பில், தை 2-ஆம் தேதியை திருவள்ளுவர் பிறந்த நாளாக அறிவிக்கவில்லை எனக் கூறி, திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படும் விதம் பற்றிய வாதம் முன்வைக்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author