சென்னையில் புதிதாக பசுமைவெளி பூங்கா; தமிழக அரசு அறிவிப்பு  

Estimated read time 1 min read

சென்னையில் 118 ஏக்கர் பரப்பளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பசுமைவெளி பூங்கா அமைத்திட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:-

சென்னை, கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் உருவாக்கம் (Creation of Public Horticultural Garden, Public Green Spaces and Public Utilities) செய்திட தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு வெங்கடாபுரம், அடையாறு மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில் 160.86 ஏக்கர் நிலம் 1.4.1945 ஆம் தேதி முதல் 99 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author