திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Estimated read time 0 min read

வான் சாகச நிகழ்வை காண சென்ற 5 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசுதான் முழு பொறுப்பு என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தது, 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டது குறித்த செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படை வசதிகளை மேற்கொள்ளாமல், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை இல்லாமல் திமுக அரசு இருந்ததாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தனது சுய விளம்பரங்களுக்காக மேற்கொள்ளும் ஏற்பாடுகளைக் கூட, மக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு செய்யாதது, அவரது நிர்வாக தோல்வியைக் காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.

5 உயிர்களை இழந்திருப்பதை ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது எனவும், இதற்கு திமுக அரசே முழு பொறுப்பு எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

தன் குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி நடத்தி, பொதுமக்களின் உயிர் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கும் திமுக அரசை கண்டிப்பதாகவும்,

பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author