நவராத்தி விழா! : நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாட்டம்!

Estimated read time 0 min read

நவராத்தி விழாவின் 4ஆம் நாள் நிகழ்ச்சி நாடு முழுவதும் விமரிசையாக நடைபெற்றது.

சக்தி வழிபாட்டிற்கு பெயர் பெற்ற மேற்குவங்கத்தில் தொடக்கம் முதலே நவராத்திரி விழா களைகட்டி வருகின்றன. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் கோள வடிவில் மிக பிரமாண்டமான எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது. அதில், நவராத்திரி விழாவின் சிறப்புகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டது. இதனை திரளான பக்தகர்கள் கண்டு ரசித்தனர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மத்திய சிறைச்சாலையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் கைதிகளும் பங்கேற்று கர்பா நடனமாடி மகிழ்ந்தனர்.

குஜராத் மாநிலம் ஜாம்நகரில், தீப்பந்தங்களை ஏந்தியபடி இளைஞர்கள் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக, நெருப்பு வளையத்திற்குள் அவர்கள் உற்சாகமாக நடனமாடியானது சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

Please follow and like us:

You May Also Like

More From Author