ஓமன் நாட்டு கடற்படையுடன் கூட்டு ஒத்திகையில் ஈடுபட்ட இந்திய கடற்படை  

இந்திய கடற்படை மற்றும் ஓமன் ராயல் கடற்படை ஆகியவை சமீபத்தில் கோவா கடற்கரையில் நசீம் அல் பஹ்ர் என்ற இருதரப்பு கடற்படை பயிற்சியை முடித்தன.
அக்டோபர் 13 முதல் அக்டோபர் 18 வரை நடத்தப்பட்ட இந்தப் பயிற்சியானது, பரஸ்பர புரிதலை வலுப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
இப்பயிற்சி அக்டோபர் 13 முதல் அக்டோபர் 15 வரை துறைமுகத்தை அடிப்படையாக வைத்து ஒரு கட்டம் மற்றும் அக்டோபர் 16 முதல் அக்டோபர் 18 வரை கடலை மையமாக வைத்து ஒரு கட்டம் என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.
துறைமுக கட்டத்தில், இரு கடற்படையினரும் தொழில்முறை கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

You May Also Like

More From Author