சீனா-கிர்கிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் இருப்புப்பாதையின் தொடக்க விழா டிசம்பர் 27ஆம் நாள் கிர்கிஸ்தானின் ஜலால்-அபாட் நகரில் நடைபெற்றது.
இந்த தொடக்க விழாவுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் உஸ்பெகிஸ்தான் அரசுத் தலைவர் ஷவ்கத் மிர்சியோயேவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் சதிர் ஜபரோவ் நேரடியாக சென்று இந்த தொடக்க விழாவில் பங்கேற்றார்.
பிராந்தியங்களில் ஒன்றுடன் ஒன்று இணைப்பை வலுப்படுத்தி, பிராந்தியங்களின் செழுமை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளின் அரசுகள் நெடுநோக்கு வாய்ந்த முடிவை எடுத்துள்ளன.
இந்த இருப்புப்பாதை, எண்ணத்தில் இருந்து நடைமுறைக்கு வருவதை அதன் தொடக்க விழா குறிக்கிறது. இருப்புப்பாதையின் கட்டுமானம் மற்றும் திறப்பு என்ற இலக்கை நோக்கிச் செல்வதில் ஒரு முக்கிய காலடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது என்று ஷிச்சின்பிங் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார்.
மூனறு நாடுகளை இணைக்கும் இந்த இருப்புப்பாதையை ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பில் புதிய ஒத்துழைப்பு மாதிரியாக உருவாக்கவும், பாதையின் அருகிலுள்ள பகுதிகளின் பொருளாதாரச் சமூக வளர்ச்சியையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தவும் தொடர்புடை தரப்புகள ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.