ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூபாய் 498.80 கோடி நிவாரணம் ஒதுக்கி முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் 5,18,783 விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரண தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில், ஓரிரு நாட்களில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்