வார இறுதியில் பயணிகளின் வசதிக்காக, பிப்ரவரி 21, 22 மற்றும் 23இல் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை ஈடுசெய்ய வழக்கமான சேவைகளுக்கு கூடுதலாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி. சென்னையின் கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களிலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பிப்ரவரி 21 ஆம் தேதி 245 பேருந்துகளும், அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்
