சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் ஏப்பல் 28ஆம் நாள் கூறுகையில், இந்தியாவின் புனித பயணிகள் சீனாவின் ஷிட்சாங்கில் பயணம் மேற்கொள்வது, சீன-இந்திய மானுடவியல் பரிமாற்றத்தின் முக்கிய பகுதியாகும்.
இரு தரப்பும் எட்டியுள்ள ஒத்தக் கருத்தின்படி, இவ்வாண்டின் கோடைகாலத்தில், இந்நிகழ்வு மீண்டும் துவங்கும். தற்போது தொடர்புடைய ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இவ்வாண்டு சீன-இந்தியத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். இந்தியாவுடன் இணைந்து, இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்தக் கருத்துகளைச் சீராக செயல்படுத்தி, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாக தெரிவித்தார்.