புதுச்சேரியில் பிளாஸ்டிக்-கை தவிர்க்க 1330 மஞ்சப்பைகளை பிடித்து விழிப்புணர்வு!

Estimated read time 1 min read

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் பிளாஸ்டிக்-கை தவிர்க்கும் வகையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆயிரத்து 330 மஞ்சப்பைகளைப் பிடித்து தன்னார்வலர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சப்பையைப் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

காமராஜர் சதுக்கத்தில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கையில் மஞ்சப்பை பிடித்துக் கொண்டு பேரணியாகக் கடற்கரைச் சாலையில் சென்றனர்.

சுமார் 225 அடி தூரத்திற்கு ஆயிரத்து 330 மஞ்சப்பைகளைப் பிடித்தபடி நின்று விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சியின் ட்ரோன் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author