சென்னையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?  

Estimated read time 0 min read

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சனிக்கிழமை (மே 3) சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை திமுக நடத்தியது.
200க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல வேண்டும் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்காக நிர்ணயித்த நிலையில், கட்சி தனது பிரச்சார ஏற்பாடுகளை முறையாகத் தொடங்கியது.
முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், போப் பிரான்சிஸுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் கூட்டம் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து கூட்டத்தில் “நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு” என்ற தலைப்பில் 1244 இடங்களில் திமுக மாநிலம் தழுவிய பொதுக் கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. மதுரையில் ஜூன் 1இல் பொதுக்குழுவை கூட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author