தன்னார்வத் தொண்டர்களுக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம்

மே 4ம் நாளான இளைஞர் தினத்தை முன்னிட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் கிசில்சு கிர்கிஸ் தன்னாட்சி ச்சோவின் அடுஷ் நகரிலுள்ள ஹலச்சுன் கிராமத்தில் அமைந்துள்ள ஷெயீட் என்ற துவக்கப் பள்ளியில் மேற்கு பகுதி கல்வி ஆதரவு திட்டத்தின் தன்னார்வச் சேவை குழுவின் உறுப்பினர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பி, நாட்டின் இளைஞர்களுக்கு விழா வாழ்த்துக்களையும் எதிர்பார்ப்பையும் தெரிவித்தார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், மேற்கு எல்லை பிரதேசத்தில் கல்வி சேவை வழங்கும் தன்னார்வத் தொண்டர்கள், உள்ளூர் கல்வி இலட்சியத்தின் வளர்ச்சி முன்னெடுப்பு, தேசிய ஒற்றுமை மற்றும் முன்னேற்றம், எல்லை பகுதி வளர்ச்சி பெறுவது மற்றும் நிதானம் முதலியவற்றுக்கு, ஆக்கப்பூர்வமான பங்கு ஆற்றியுள்ளனர்.

பரந்துபட்ட இளைஞர்கள், நம்பிக்கையை உறுதி செய்து, போராடும் எழுச்சியை வெளிகொணர்ந்து, நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான இடங்களுக்குச் சென்று, சீனப் பாணியுடைய நவீனமயமாக்கக் கட்டுமானத்துக்கு இளைஞர் சக்தியை ஊட்ட வேண்டும் என்று ஊக்கம் அளித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author