சீனாவில் மே தின விடுமுறையின் போது, சுமார் 31 கோடியே 4 இலட்சம் பயணிகள் உள்நாட்டில் பயணம் மேற்கொண்டனர்.
இது, கடந்த ஆண்டை விட 6.4 விழுக்காடு அதிகரித்து காணப்பட்டது. உள்நாட்டுப் பயணிகளின் சுற்றுலா நுகர்வு தொகை 18 ஆயிரம் 26 கோடியே 90 இலட்சமாக இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8 விழுக்காடு அதிகரித்தது என தொடர்புடைய வாரியங்களின் புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் முக்கிய நுகர்வுப்பொருட்களின் மொத்த சில்லறை விற்பனை மற்றும் உணவுச் சேவை துறையின் விற்பனை தொகையின் அதிகரிப்பு விகிதம் 6.3 விழுக்காட்டை எட்டியுள்ளது.
குறிப்பாக, விமானத்தை ஓட்டுதல், வான்குடை மூலம் தரை இறங்குதல் உள்ளிட்டவை மிகவும் வரவேற்கப்படுகின்றன. சீனாவின் நுகர்வுச் சந்தை முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிட்டத்தக்கது.
தொழில் நுட்பப் புத்தாக்கத்தின் மூலம், விடுமுறையின் போது, பல்வேறு பிரதேசங்களின் பண்பாடு மற்றும் சுற்றுலா பொருட்கள், மக்களின் பல்வகை தேவைகளை நிறைவு செய்துள்ளன.
சீனப் பொருளாதாரத்தின் மாற்றம், நுகர்வின் மூலம் தீவிரமாக்கப்பட்டு, மிக பெரும் சந்தைகளின் உள்ளார்ந்த ஆற்றலை விரிவாக்கியுள்ளது.
சீனாவின் நுகர்வுச் சந்தை சுறுச்சுறுப்பாக வளர்ந்து வருவது, உலகத்திற்கு நன்மை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.