18வது சீசன் ஐபிஎல் தொடர், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் காரணமாக ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.
தற்போது எல்லையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடரை மீண்டும் தொடங்கும் முனைப்பில் பிசிசிஐ செயல்படுகிறது.
பிசிசிஐ திட்டத்தின்படி, மீதமுள்ள 12 போட்டிகளை மே 30ஆம் தேதிக்குள் முடிக்க உத்தேசித்துள்ளது.
இதற்காக சென்னை, ஐதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களில் மட்டுமே போட்டிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் இரு போட்டிகள் நடத்தப்படும் திட்டமும் பரிசீலிக்கப்படுகின்றது.
இதற்காக பிசிசிஐ, வெளிநாட்டு அணி வீரர்களின் பயண திட்டங்களை உடனடியாக உறுதி செய்யுமாறு அணிகள் உரிமையாளர்களை கேட்டுள்ளது.
ஐபிஎல் 2025: மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியாகக்கூடும்
