தலைமை ஆசிரியருக்கு மகாகவி பாரதியார் விருது: வழக்கறிஞர் வழங்கினார்

Estimated read time 1 min read

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கவிஞர் பூங்குயில் சிவக்குமார் – ஆசிரியை ம.மகாலட்சுமி ஆகியோரின் மகள் எம்.எஸ்.விஜயபாரதியின் 2 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி பல்திறன் நிகழ்வுகள் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முதுகலை ஆசிரியை ம.மகாலட்சுமி வரவேற்றார். நாகர்கோவில் மருத்துவர் ஏ.எம். அரசு அவர்களின் சிரிப்பு யோகா மற்றும் குழந்தை வளர்ப்பு கலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் மகாகவி பாரதியாரின் பாடல்களில் பெரிதும் போற்றப்படுவது பாரத விடுதலையா…! பெண் விடுதலையா..! என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் மழையூர் வி.தமிழரசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பாரத விடுதலையே..! என்ற அணியில் பட்டதாரி ஆசிரியர் ஆர்.எஸ். சிவக்குமார், முனைவர் உ.பிரபாகரன் ஆகியோரும், பெண் விடுதலையே… என்ற அணியில் ஆசிரியை சோபியா மேரி, எழுத்தாளரும், ஆசிரியையுமான சா.ரஷீனா ஆகியோரும் பங்கேற்றனர். மேலும் தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற தெள்ளார் ஜோதி நிதியுதவி தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பழ.சீனிவாசனுக்கு மகாகவி பாரதியார் விருதை வழக்கறிஞர் எல்.குமார் வழங்கினார். இறுதியில் பூங்குயில் சிவக்குமார் நன்றி கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author