3ஆவது சீன-பசிபிக் தீவு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்

Estimated read time 1 min read

3ஆவது சீன-பசிபிக் தீவு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் சீனாவின் சியாமன் நகரில் மே 28ஆம் நாள் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யி, கிரிபாட்டி அரசுத் தலைவரும் வெளியுறவு அமைச்சருமான மாவ்மொவ் ஆகிய இருவரும் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.

இக்கூட்டத்தில் வாங்யி கூறுகையில், அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த 4 முழுமையான மதிப்புகள் என்பது சீனா தீவு நாடுகளுடன் உறவை வளர்ப்பதற்கான அடிப்படைக் கோட்பாடாகும் என்பதைச் சுட்டிக்காட்டினார். அதோடு, இரு தரப்பு கூட்டு எதிர்காலத்தை உருவாக்குவதற்கு அவர் 6 முன்மொழிவுகளையும் வெளியிட்டார்.

பரஸ்பர மதிப்பு அளிப்பது, வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்குவது, இவ்வாண்டுக்குள் மக்கள் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய 200 திட்டப்பணிகளை மேற்கொள்வது, ஊடகம், இளைஞர், மகளிர், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு பரிமாற்றங்களை அதிகரிப்பது, நேர்மையையும் நியாயத்தையும் பேணிக்காப்பது, உலகளவில் காலநிலை மேலாண்மையில் இரு தரப்பு ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது ஆகியவை இந்த 6 முன்மொழிவுகளில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் ஆகும்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author