போலந்து அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

 

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜுன் 6ம் நாள் தொலைப்பேசி மூலம் போலந்து அரசுத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட காரொ நௌரொஸ்கிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், மிக முன்னதாக நவ சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவிய நாடுகளில் ஒன்றாக போலந்து திகழ்கிறது. சீனாவும் போலந்தும் பாரம்பரிய நட்பைக் கொண்டு, பன்முக நெடுநோக்கு கூட்டாளிகளாக விளங்குகின்றன. மாற்றம் மற்றும் பதட்டம் வாய்ந்த சர்வதேச நிலைமையைச் சந்திக்கும் போது, நட்புக் கூட்டாளிகளான இரு நாடுகள், அரசியல் நம்பிக்கையை மேலும் ஆழமாக்கி, நெடுநோக்கு தொடர்பை வலுப்படுத்த வேண்டும். சீன-போலந்து உறவின் வளர்ச்சியில் முக்கியத்துவம் அளித்து, நௌரொஸ்கியுடன் இணைந்து, இரு நாட்டின் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவின் நிலையான வளர்ச்சியை முன்னெடுத்து, இரு நாட்டு மக்களுக்கு நன்மை தந்து, உலகிற்கு மேலதிக நிதானம் மற்றும் உறுதித் தன்மையை ஊட்ட விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author