சீனத் துணை அரசுத் தலைவர் ஹாங்சேன் அழைப்பின்படி, பிரான்ஸுக்குச் சென்று, உள்ளூர் நேரப்படி ஜூன் 8,9 ஆகிய நாட்களில்,அந்நாட்டில் நடைபெற்ற ஐ.நாவின் 3ஆவது கடல் மாநாட்டின் பொது விவாதத்தில் உரை நிகழ்த்தினார்.
கடல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தொடரச்சியான வளர்ச்சி எனும் இலக்குகளை நனவாக்கி, பல்வேறு தரப்புகள் தத்தமது பொறுப்புகளுக்கு ஏற்க வேண்டும். உலகின் வளர்ச்சி மற்றும் தெற்குலக ஒத்துழைப்பு நிதியம் மூலம், தொடர்புடைய சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, கடல் மேலாண்மையை விரைவுபடுத்தி, பசுமையான வளர்ச்சியைத் தூண்டி, கடல் பல்லுயிர் உடன்படிக்கையை வெகுவிரைவில் நடைமுறைப்படுத்தி பன்முகங்களில் இயங்க சீனா ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இதே காலத்தில், பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரான், ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸ் ஆகியோருடன் அவர் முறையே பேச்சுவார்த்தை நடத்தினார்.