வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, இன்று ஈரோடு, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் கடவனூர், சேலம் மாவட்டம் சந்தியூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
