அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் பிரம்மோற்சவ விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Estimated read time 0 min read

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோயிலான மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட கொடி, வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. கொடியேற்றத்தை முன்னிட்டு மீனாட்சி சொக்கநாதர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author