எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் ஜூலை 15 அன்று மும்பையில் அதன் முதல் அனுபவ மையத்தை (Experience centre) தொடங்குவதன் மூலம் இந்திய சந்தையில் அதன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நேரடி நுழைவை மேற்கொள்ள உள்ளது.
இதுதொடர்பான ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, இந்த மையம் பாந்த்ரா குர்லா வளாகத்தில் திறக்கப்படும். இது பல வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவில் எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா கால் ஊன்றுவதைக் குறிக்கிறது.
இந்த வெளியீட்டின் ஒரு பகுதியாக டெஸ்லா ஏற்கனவே அதன் ஷாங்காய் தொழிற்சாலையிலிருந்து மும்பைக்கு ஐந்து மாடல் ஒய் வாகனங்களை அனுப்பியுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு காரின் விலையும் தோராயமாக ₹27.7 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜூலை 15 அன்று இந்தியாவில் முதல் மையத்தை டெஸ்லா திறக்க உள்ளது
