நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய ஜிஎஸ்டி விதிமுறை – அத்தியாவசிய பொருட்களின் விலை குறைகிறது!

Estimated read time 0 min read

புதிய ஜிஎஸ்டி விதிமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின உரையின்போது தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி விதிகளில் திருத்தம் செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி 2 அடுக்குகளாக மாற்றப்பட்டன.

மேலும், ஜிஎஸ்டி வரி குறைப்பு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 12 மற்றும் 18 சதவீதம் என்ற இரண்டடுக்கு ஜிஎஸ்டி நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

உணவு மற்றும் மளிகையில் 99 சதவீத பொருட்கள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் சோப், ஷாம்பு, பேபி டயப்பர், டூத் பேஸ்ட், ஷேவிங் லோஷன், ரேசர் ஆகியவற்றின் விலை கணிசமாக குறையும் .

Please follow and like us:

You May Also Like

More From Author