டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்டவர் நோக்கம் இன்னும் தெளிவாக இல்லை: FBI  

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு முயற்சியில் குற்றவாளி, டிரம்ப் மற்றும் ஜனாதிபதி ஜோ பைடன் ஆகிய இருவரின் நிகழ்வுகளை ஆன்லைனில் தேடியுள்ளார் என FBI தெரிவித்துள்ளது.
அவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெடிபொருட்கள் பற்றிய தகவல்களைப் பார்த்து, கடந்த மாதம் அவர் துப்பாக்கிச் சூடு நடத்திய பென்சில்வேனியா பிரச்சார பேரணியை “வாய்ப்பு” என்று தீர்மானித்ததாக கூறப்படுகிறது.
இதனை ஒரு மூத்த FBI அதிகாரி AP இடம் புதன்கிழமை தெரிவித்தார்.
ஏறக்குறைய 1,000 முறை குற்றவாளி தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்-இடம் விசாரணை நடத்திய புலனாய்வாளர்களுக்கு ஜூலை மாத பிரச்சார பேரணியின் போது டிரம்பை ஏன் சுட்டார் என்பதற்கான உள்நோக்கம் புலப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author