“37 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாமக”

Estimated read time 1 min read

பாட்டாளி மக்கள் கட்சி 37-ம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதை குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மாபெரும் மக்கள் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி இந்த மண்ணில் உதித்த நாள் இன்று. சமூக நீதிக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையாக இன்னொரு இயக்கம் தமிழ்நாட்டில் இல்லை.

தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துக்களை அரனாக இருந்து காக்கும் இயக்கம் தான் பாட்டாளி மக்கள் கட்சி. தமிழ் மொழி,இனம், தமிழ்நாட்டு மக்கள் இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையுடன் பயணிக்க வேண்டும்.

தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மற்றும் உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்கு தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்கேற்க வேண்டும்.

அது நமது உரிமையும் கூட அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தை கூட்ட நமது இயக்கம் மருத்துவர் அய்யா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author