பிரதமர் நரேந்திர மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இரண்டு நாள் பயணமாகச் சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) அன்று சீனா வந்துள்ளார்.
ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில், 10 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
சமீபத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
அமெரிக்கா இந்திய ஏற்றுமதிகள் மீது கடுமையான வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, இந்த SCO மாநாடு, இந்தியா சீனாவுடன் தனது உறவுகளை வலுப்படுத்த ஒரு முக்கியமான தளமாகப் பார்க்கப்படுகிறது.
7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக சீனா சென்றார் பிரதமர் மோடி
