ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஜூலை மாத நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சிக்கு ஏற்பட்ட வரலாற்றுத் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலக முடிவு செய்துள்ளார்.
ஒரு மாதத்திற்கும் மேலாகப் பதவி விலக மறுத்து வந்த பிரதமர் இஷிபா, தனது லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்குள் இருந்து வந்த கடுமையான அழுத்தத்திற்குப் பணிந்து இந்த முடிவை எடுத்துள்ளார்.
இந்த முடிவு, கட்சித் தலைமைக்கான தேர்தலை முன்கூட்டியே நடத்தலாமா என்பது குறித்து லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) வாக்களிக்க இருந்ததற்கு ஒரு நாள் முன்னதாக எடுக்கப்பட்டது.
இஷிபாவின் இந்த முடிவு, கட்சியில் மேலும் பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்கவே என்று ஜப்பானின் அரசு தொலைக்காட்சியான NHK தெரிவித்துள்ளது.
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலக முடிவு
