கோகோ தீவுகளில் சீனாவின் இருப்பு இல்லை என மியான்மர் இந்தியாவுக்கு உறுதி  

Estimated read time 1 min read

வங்காள விரிகுடாவில் கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த கோகோ தீவுகளில் (Coco Islands) சீனாவின் ராணுவ இருப்பு எதுவும் இல்லை என்று மியான்மர் இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளது.
இந்தியாவின் நீண்டகாலப் பாதுகாப்புக் கவலைகளைத் தணிக்கும் வகையில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
மியான்மரின் ஆளும் ராணுவ ஆட்சிக்குழு, இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங்கிடம், கடந்த செப்டம்பர் மாதம் நடந்த பாதுகாப்புப் பேச்சுவார்த்தையின்போது, கோகோ தீவுகளில் ஒருகூடச் சீன நாட்டவர் இல்லை என்று தெரிவித்தது.
ஆனாலும், இந்திய எல்லைக்கு 100 மைல்களுக்கும் குறைவான தூரத்தில் உள்ள இந்தத் தீவுச் சங்கிலிக்கு, இந்தியக் கடற்படை ஆய்வுப் பயணத்தை மேற்கொள்வதற்கான கோரிக்கைக்கு மியான்மர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author