“பைசன் எந்த நோக்கத்திற்காக எடுக்கப்பட்டதோ அது நிறைவேறியது”- மாரி செல்வராஜ்

Estimated read time 0 min read

பைசன் திரைப்படம் எந்த நோக்கத்திற்காக எடுக்கப்பட்டமோ, என்ன மாதிரியான அதிர்வலைகளை அதை முழுமையாக செய்துள்ளது என திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

திரைப்பட இயக்குனர் இயக்குனர் மாரி செல்வராஜ் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் பைசன் எனது ஐந்தாவது படமாக ரிலீஸ் ஆகி உள்ளது. பைசன் ரிலீஸ் ஆன நாளிலிருந்து மிகப்பெரிய மக்கள் கொண்டாட்டத்தையும் வெற்றியும் அடைந்துள்ளது. எந்த நோக்கத்துக்காக எடுக்கப்பட்டதோ என்ன மாதிரியான அதை முழுமையாக செய்து இருக்கு என்பதில் சந்தோஷம். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி தியேட்டர் விசீட்க்காக வந்துள்ளேன், எல்லோருக்கும் நன்றி வாழ்த்துக்கள்

மக்கள் மிகப் பெரிய வெற்றியை கொடுத்துள்ளார்கள் சந்தோஷமாக உள்ளது எதற்காக படம் எடுத்தமோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுன மாதிரி பெரும் நம்பிக்கை கொடுக்கிற மாதிரியான வெற்றியை பைசன் திரைப்படத்திற்கு வெற்றி மக்கள் ஆதரவு கொடுத்துள்ளார்கள். எல்லோருக்கும் ரொம்ப நன்றி இந்த படம் மக்களுக்காக எடுக்கப்பட்டது. பைசன் மக்களுக்காக எடுக்கப்பட்ட படம் தமிழ் மக்களுக்காக எடுக்கப்பட்ட படம் ஒட்டுமொத்த தமிழக மக்களு அதை ஏற்றுக் கொண்டதும் அதை கொண்டாடுவதும் மிக சந்தோஷமாக இருக்கிறது. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். அடுத்து நடிகர் தனுஷ் வைத்து படம் எடுக்கிறேன். அது ஒரு ஹிஸ்டாரிக்கல் மூவி” என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author