வாட்ஸ்அப்பில் இருந்து அரட்டை பயனருக்கு மெசேஜ் அனுப்பும் வசதி வர வாய்ப்பு?  

Estimated read time 1 min read

தமிழ்நாட்டு நிறுவனமான ஜோஹோவால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மெசேஜிங் செயலியான அரட்டை, வாட்ஸ்அப்பிற்கு ஒரு வலுவான உள்ளூர் மாற்றாக உருவெடுத்துள்ளது.
மெசேஜிங் செயலிகள் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கக்கூடிய (Cross-compatibility) தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சில மாதங்களுக்கு முன்பு வலியுறுத்திய நிலையில், தற்போது அதன் முக்கியப் போட்டியாளரான வாட்ஸ்அப் அதே அம்சத்தை சோதித்து வருவது தெரிய வந்துள்ளது.
WaBetaInfo இன் தகவலின்படி, வாட்ஸ்அப் பயனர்கள் அரட்டை போன்ற பிற மெசேஜிங் தளங்களில் உள்ளவர்களுடன் குறுஞ்செய்தி அனுப்பும் அம்சத்தை ஐரோப்பாவில் உள்ள பீட்டா சோதனையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த அம்சம் செயல்பாட்டிற்கு வந்தால், வாட்ஸ்அப் பயனர்கள் அரட்டை செயலியைத் திறக்காமலேயே அதில் உள்ளவர்களுடன் உரையாடலைத் தொடர முடியும்.

Please follow and like us:

You May Also Like

More From Author