பங்களாதேஷின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா மீது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) வழங்கவிருக்கும் தீர்ப்புக்கு முன்னதாக, தலைநகர் டாக்காவில் (Dhaka) குண்டுவெடிப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
கடந்த ஆண்டு நடந்த ‘ஜூலை எழுச்சி’ (July Uprising) தொடர்புடைய மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர்கள் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை கோரியுள்ளனர்.
ஷேக் ஹசீனாவும், முன்னாள் உள்துறை அமைச்சர் அசாத்துசமான் கான் கமலும் அவர்கள் இல்லாத நிலையில் வழக்கை எதிர்கொண்டனர்.
தீர்ப்பின் சில பகுதிகள் அரசு தொலைக்காட்சியிலும் (BTV) சமூக ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளன.
வங்கதேசத்தில் பதற்றம்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கில் இன்று தீர்ப்பு
