சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, முதல்முறையாக ஸ்ரீநகருக்கு இன்று பயணமாகிறார் பிரதமர் மோடி.
அங்கு நடைபெறவுள்ள பேரணியில் உரையாற்றி, ரூ.6,400 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை அவர் வெளியிட உள்ளார்.
ஸ்ரீநகரில் உள்ள மைதானத்தில் நடைபெறும் ‘விக்சித் பாரத் விக்சித் ஜம்மு காஷ்மீர்’ நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொள்கிறார்.
நாடு முழுவதும் உள்ள பலவிதமான யாத்திரை மற்றும் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் 43 திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
பிஜேபி தலைமையிலான மத்திய அரசு ஆகஸ்ட் 5, 2019 அன்று 370வது பிரிவின் விதிகளை ரத்து செய்து, முந்தைய மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
அதன் பின்னர் மோடி, அங்கே சென்றதே இல்லை.