பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படம் மற்றும் தனிப்பட்ட அடையாளங்களைப் பயன்படுத்த, யூடியூப், ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, அனுமதி இல்லாமல் தனது புகைப்படங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரி இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
தனது மனுவில், இளையராஜா தன்னை அடையாளப்படுத்தும் விதமாக உள்ள புகைப்படம், பெயர், ‘இசைஞானி’ என்ற பட்டப் பெயர், குரல் என எதையும் தனது அனுமதி இல்லாமல் வணிக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது என்றும், ஏற்கனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்குமாறும், அதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களைத் தாக்கல் செய்யுமாறும் அவர் கோரியிருந்தார்.
சமூக ஊடகங்களில் இளையராஜா பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை
