டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த சமீபத்திய கார் குண்டுவெடிப்புத் தாக்குதல், புல்வாமா தாக்குதலின் பாணியைப் போலவே உள்ளது என்றும், இது ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammad) பயங்கரவாத அமைப்பின் தெளிவான அடையாளம் என்றும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே.எஸ். தில்லான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் டீப் ஸ்டேட் (Deep State) இந்தியாவில் பயங்கரவாதத்தைப் பரப்புவது மட்டுமே ஒரே நோக்கம் என்றும், ஜெய்ஷ் அமைப்பு அந்த அமைப்பின் தயாரிப்பே என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
குண்டுவெடிப்பு நிகழ்த்தப் பயன்படுத்தப்பட்ட 20 டெட்டனேட்டர்கள் மற்றும் 24 ரிமோட் கண்ட்ரோல் யூனிட்கள், 20 தனித்தனி வெடிகுண்டுகளை ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்யும் திறன் கொண்டவை என அவர் கூறினார்.
செங்கோட்டை தாக்குதல் புல்வாமா பாணியில் நடத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தகவல்
