இண்டிகோ விமான சேவைகள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டு, நாடு முழுவதும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ள இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
“அரசின் விதிகள் மற்றும் விதிமுறைகள் காரணமாகப் பொதுமக்களுக்கு எந்த விதமான சிரமமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்,” என்று பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார்.
“சட்டங்களும் விதிமுறைகளும் பொதுமக்களுக்கு சுமையாக இருக்காமல், அவர்களின் வசதிக்காகவே இருக்க வேண்டும். சட்டங்கள் அமைப்பை மேம்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட வேண்டும், பொதுமக்களைத் துன்புறுத்துவதற்காக அல்ல,” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இண்டிகோ நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் மோடி அமைச்சரவை சகாக்களுக்கு அறிவுரை
