வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் 209 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றுள்ள பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான், பிப்ரவரி 17 (செவ்வாய்க்கிழமை) அன்று அந்நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்த பிரம்மாண்ட விழாவில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 13 நாடுகளின் தலைவர்களுக்கு வங்கதேச அரசு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.
சீனா, பாகிஸ்தான், இலங்கை, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு: பிரதமர் மோடி எடுக்கப்போகும் முடிவு என்ன?
