ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லீ ஜியா ச்சோ, தனது பணிகள் குறித்து வழங்கிய அறிக்கையை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 16ம் நாள் பெய்ஜிங்கில் கேட்டறிந்தார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், லீ ஜியா ச்சோ தலைமையிலுள்ள ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு, தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பேணிக்காத்து, 8வது ஹாங்காங் சட்டமியற்றல் அவையின் தேர்தலை நடத்தி, நிலையான பொருளாதார வளர்ச்சியை நிறைவேற்றியுள்ளது. லீ ஜியா ச்சோ மற்றும் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசின் பணிகளை மத்திய அரசு பாராட்டுகிறது என்று தெரிவித்தார்.
ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு, சீனாவின் 15வது ஐந்தாண்டுகால திட்டத்துடன் ஒன்றிணைந்து, பொருளாதாரத்தின் உயர்தர வளர்ச்சியை முன்னெடுத்து, குவாங்டுங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய வளைகுடா பகுதியின் கட்டுமானத்தில் தீவிரமாக ஈடுபட்டு, தேசிய வளர்ச்சி அமைப்புக்கு மேலதிக பங்கு ஆற்ற வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
