ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனத் திருவிழா நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் திருவிழாவின் போது மட்டும் தான் இங்குள்ள அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலையிலிருந்து சந்தனக் காப்பு அகற்றப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரத்தில் ஜனவரி 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
