பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) தனது 129வது மன் கி பாத் வானொலி உரையின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
இதில் 2025 ஆம் ஆண்டில் இந்தியா அடைந்த பெருமைக்குரிய தருணங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு குறித்து அவர் விரிவாகப் பேசினார்.
இந்த ஆண்டு நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் குறித்துப் பேசிய பிரதமர், இது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையின் சின்னமாகும் என்றார்.
“இந்தியா தனது பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்பதை உலகுக்கு இந்த நடவடிக்கை உணர்த்தியுள்ளது.
பாகிஸ்தானின் தவறான முயற்சிகளுக்குப் பதிலடி கொடுத்ததன் மூலம், இன்றைய பாரதம் தனது எல்லையைப் பாதுகாப்பதில் எவ்வளவு உறுதியாக உள்ளது என்பதை உலகம் கண்டது.” என்று அவர் குறிப்பிட்டார்.
2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் சாதனைகள்: மன் கி பாத் உரையில் பிரதமர்
