நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: புயலைக் கிளப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள்  

Estimated read time 0 min read

வார இறுதி இடைவேளைக்கு பிறகு இன்று மீண்டும் கூடவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான டெல்லி காவல்துறையின் தடியடி மற்றும் புதிய முறைகேடு தடுப்புச் சட்ட மசோதா உள்ளிட்ட பல விவகாரங்களால் கடும் அமளி நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் நடைபெறவுள்ள கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தில் இன்றைய நாடாளுமன்ற வியூகம் இறுதி செய்யப்படவுள்ளது.
அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், பெல்லட் துப்பாக்கிகள் போன்ற ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்த யார் அனுமதி அளித்தது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

You May Also Like

More From Author