2025ஆம் ஆண்டில் சீன அஞ்சல் துறை மூலம் அனுப்பப்பட்ட விரைவுப் பொதிகளின் மொத்த எண்ணிக்கை 21ஆயிரத்து 650கோடியை எட்டி கடந்த ஆண்டை விட, 11.5விழுக்காடு அதிகரித்துள்ளது.
இது குறித்து, சீனத் தேசிய அஞ்சல் பணியகத்தின் தலைவர் சௌச்சுன்ஜியூ 7ஆம் நாள் நடைபெற்ற சீனத் தேசிய அஞ்சல் பணிக் கூட்டத்தில் கூறுகையில், 2025ஆம் ஆண்டில் சீன அஞ்சல் துறையின் வருமானம் ஒரு லட்சத்து 80ஆயிரம் கோடியைத் தாண்டி கடந்த ஆண்டை விட, 6.4விழுக்காடு அதிகரித்துள்ளது.
அவற்றில், விரைவஞ்சல் துறையின் வருமானம் ஒரு லட்சத்து 50ஆயிரம் கோடி யுவானை எட்டி 6.5விழுக்காடு அதிகரித்துள்ளது என்றார்.
