வெளிமாநிலங்களுக்கு M-சாண்ட் கொண்டு செல்ல தற்காலிக தடை

Estimated read time 1 min read

தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான அத்தியாவசிய கனிமப் பொருள்கள் தங்கு தடையின்றி, போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதன்படி எம்-சாண்ட் உள்ளிட்ட முக்கிய கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்தவும், தேவைப்படின் அதற்கு தற்காலிகத் தடை விதிக்கவும் சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநருக்கு முழு அதிகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அதிரடி உத்தரவு, மாநிலத்தில் கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், உள்ளூர் கட்டுமானத் திட்டங்கள் தொய்வின்றி நடைபெறவும் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author