இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி என்ற அதிநவீன போர்க் கப்பலை சனிக்கிழமை (ஜூலை 11) விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் முறைப்படி இந்தியக் கடற்படையில் இணைத்து வைத்தார்.
ப்ராஜெக்ட் 17A திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஆறாவது நில்கிரி-கிளாஸ் ஸ்டெல்த் ரகப் போர்க் கப்பல் இதுவாகும்.
இதற்கான விழாவில் கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் உள்ளிட்ட பல உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.
75% உள்நாட்டுத் தொழில்நுட்பம்! கடற்படையில் இணைந்தது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி
