சென்னை பெருநகர மாநகராட்சி, தனது வரலாற்றிலேயே முதன்முறையாகப் பசுமைப் பத்திரங்களை வெளியிட்டு வெற்றிகரமாக 205 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளில் இத்தகைய பசுமைப் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டிய முதல் மாநகராட்சி என்ற பெருமையைச் சென்னை பெற்றுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிதி திரட்டல் முயற்சிக்கு முதலீட்டாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னை மாநகராட்சி பசுமைப் பத்திரம் மூலம் ரூ.205 கோடி நிதி திரட்டல்
